Cinema

பலர் கண்ணீர் சிந்தும் "திரைப்படம்" ஒரு முறையாவது பார்த்துவிடுங்கள்.. ஆயிரம் ஜெய் பீமிற்கு சமம்..!

Tearful movie
Tearful movie

ஜெய் பீம் திரைப்படம் ஓடுக்கப்பட்ட ஒருவரின் வழியை சொல்கிறது என்றால் நேற்று வெளியான காஸ்மீர் பைல்ஸ் திரைப்படம் ஒரு இனத்தின் மீதே நடத்தப்பட்ட தாக்குதலை விவரிக்கிறது, இந்த திரைப்படத்தை பார்த்த பலர் கண்ணீர் விட்டு தாங்கள் இதே நிலையை அடைந்தோம் என கூறியது மேலும் பலரை கண்ணீர் சிந்த வைக்கிறது.


திரைப்பட நடிகர் மாதவன் இந்த பாடத்தை பாராட்டி இருக்கிறார் மேலும் அவர் குடும்பத்துடன் படத்தை பார்த்ததாகவும் குடும்பமே கண்ணீர் சிந்தியதாகவும் கூறப்படுகிறது அப்படி என்னதான் அந்த கதையில் சொல்ல பட்டு இருக்கிறது,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லட்சக்கணக்கான ஹிந்து பண்டிட்கள் மற்றும் சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் என மைனாரிட்டி மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களை ஒடுக்குவதிலேயே குறியாக இருக்கின்றனர் பெரும்பான்மையான இஸ்லாமிய அடிப்படைவாதிகள். உதாரணமாக, ஹிந்து பண்டிட்களின் உணவுக்கு தானியங்கள்கூட கிடைக்க விடாமல் செய்கின்றனர்.

தப்பித் தவறி ஹிந்து பண்டிட் வீட்டில் தானியங்கள் இருப்பது தெரிவந்தால், அவற்றை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அபகரித்துச் செல்வார்கள் அல்லது தானியங்களை வீதியில் வீசிவிட்டுச் செல்வார்கள்.

இந்த சூழலில், ஒரு காலகட்டத்தில் (1990-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம்) ஹிந்து பண்டிட்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை மதம் மாறும்படி பகிரங்கமாக அறிவிக்கிறது மெஜாரிட்டி இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல். அப்படி மாற மறுத்தால் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் அறைகூவல் விடுக்கிறது. இதையும் மீறி இங்கிருந்தால் சுட்டுக் கொல்வோம் என்கிறார்கள்.

இதை நிறைவேற்றவும் செய்கிறார்கள் என்பதுதான் வேதனை. காஷ்மீரை விட்டு வெளியேறாமல் இருக்கும் ஹிந்து பண்டிட்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக் கொல்கிறார்கள். இதில் கர்ப்பிணி பெண்களும் அடக்கம்.

இதில், கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், லோக்கல் போலீஸாரை விரட்டி விட்டு, ராணுவ வீரர்களைப் போல உடையணிந்து வந்து, பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கிறோம்.

தைரியமாக வெளியே வாருங்கள் என்று நம்ப வைத்து, வெளியில் வரும் பண்டிட்களை கொடூரமாக சுட்டுக் கொல்கிறது இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல். எங்கு பார்த்தாலும் ரத்தம் ரத்தம்… ஆனால், படத்துக்கு ஏ சர்டிபிகேட் கிடைத்தாலும் பரவாயில்லை என்று சொல்லி, இந்தக் காட்சிகளை எடிட் செய்யாமல் அப்படியே வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி.

இதனால், காஷ்மீரை விட்டு பரிதாபமாக வெளியேறி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அகதிகளாக தஞ்சம் புகுகிறார்கள் ஹிந்து பண்டிட்கள். இதுதான் மீதிக் கதை.

அதேசமயம், இந்த கொடூரத்தை நியாயப்படுத்தும் வகையில், கம்யூனிஸ்ட்கள் எப்படியெல்லாம் கட்டுக்கதைகளை கட்டி விடுகிறார்கள், மாணவர்களை எப்படியெல்லாம் மூளைச்சலவை செய்தார்கள் என்பதையும் தெளிவாக படம் பிடித்துக் காட்டி இருக்கிறார் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி. அதேபோல, அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி, இதை கண்டும் காணாமல் இருந்ததையும் அம்பலப்படுத்தி விட்டார்.

இந்தப் படம் மட்டும் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வந்திருந்தால், காங்கிரஸ் கட்சியின் நிலைமை இன்னும் பரிதாபத்துக்குரியதாக இருந்திருக்கும்.

இந்தப் படத்தை பார்த்துவிட்டுத்தான் ஏராளமான ஹிந்துக்கள் கண்ணீர் வடித்திருக்கிறார்கள். இப்படத்தைப் பார்த்த காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண், இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரியை கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுத சம்பவம் காண்போர் கண்களை குளமாக்கியது என்றால் மிகையல்ல. ஆக மொத்தத்தில், ஒரே திரைப்படத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் சுயரூபம் ஆகியவற்றை வெளிச்சம்போட்டுக் காட்டி விட்டார் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி.

தில்லாக இப்படத்தை வெளியிட்ட இயக்குனர் விவேக்குக்கு ஒரு ஹாட்ஸ் ஆப்! இப்படத்துக்கு ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வரி விலக்கு அளித்திருப்பது கூடுதல் தகவல் இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என சிலர் நீதிமன்றம் சென்ற நிலையில் நீதிமன்றம் தடை செய்ய மறுத்துவிட்டது. இந்த திரைப்படம் வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.