Cinema

கார்த்திகை செல்வன் செய்தி சேனலில் இருந்து வெளியேறினாரா வெளியேற்றப்பட்டாரா?

Karthigai selvan
Karthigai selvan

பிரபல தனியார் தொலைக்காட்சியில் அரசியல் பிரிவு ஆசிரியராக முதல் இடத்தில் இருந்த கார்த்திகை செல்வன் தற்போது அந்த சேனலில் இருந்து வெளியேறி இருக்கிறார், கடைசியாக அவர் பணியாற்றிய நாளில் விடைபெறும் நிகழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


அவருடன் ஒன்றாக பயணத்தவர்கள் கார்த்திகை செல்வன் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அதே நேரத்தில் உண்மையில் ஏன் உடனடியாக வெளியேற வேண்டிய காரணம் என்ன என்ற பல கேள்விகள் எழுந்தன , இந்த சூழலில் கார்த்திகை செல்வன் வெளியேற்றம் திட்டமிட்டு அரங்கேரி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.



செய்தி நிறுவனத்தின் அரசியல் பிரிவு ஆசிரியர் என்ற மிக முக்கிய பொறுப்பில் இருந்த கார்த்திகை செல்வனை, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஊடக நிறுவனம் நீக்கியது அந்த பொறுப்பை கார்த்திகை செல்வனின் ஜூனியரான கார்த்தி கேயனிடம் வழங்கியது நிர்வாகம், அதே நேரத்தில் கார்த்திகை செல்வனுக்கு டிஜிட்டல் பக்கத்தில் பணியாற்றுமாறு நிர்வாகம் பணியை மாற்றி வழங்கியதாம்.



இங்குதான் கார்த்திகை செல்வனுக்கு மிகுந்த மன உளைச்சல் உண்டானதாகவும், தன்னைவிட ஜூனியருக்கு பொறுப்பு கொடுத்தது கூட பெரிய விஷயம் இல்லை, ஆனால்  தம்மை சாட்டிலைட் நிர்வாகித்திற்குள் வைத்து கொள்ளாமல் சமூக வலைத்தளங்களை மேனேஜ் செய்யும் டிஜிட்டல் குழுவிற்கு மாற்றியது கடும் வேதனை அளிக்க ஒரு மனதாக தொலைக்காட்சியில் இருந்து வெளியேறும் முடிவிற்கு வந்துவிட்டாராம் அவருடைய முடிவை ஊடக நிர்வாகமும் ஏற்று கொண்டதாம்.

இதன் மூலம் கார்த்திகை செல்வன் திட்டமிட்டு நிர்வாகத்தால் வெளியேற்ற பட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது அதே நேரத்தில் சமீபத்தில் கார்த்திகை செல்வன் உட்பட ஊடக துறை மற்றும் சில அரசியல் கட்சியை சேர்ந்த நபர்கள் அமெரிக்காவில் மீட் செய்த புகைப்படம் வெளியான நிலையில் அது கடும் சர்ச்சையை உண்டாக்கியது, அதன் காரணமாக கூட அரசியல் பிரிவு ஆசிரியர் பொறுப்பில் இருந்து கார்த்திகை செல்வன் நீக்கப்பட்டு இருக்கலாம் என ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் இது குறித்து விரைவில் கார்த்திகை செல்வன் வெளிப்படையாக தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.