
தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது இந்து சமய மக்கள் முழுவதுமாக புறக்கணிக்கப்படுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு தமிழ்கத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடலாம் மத்திய அரசுக்கு எதிராக போராடலாம், ஆளும்கட்சி பொதுக்கூட்டம் நடத்தலாம், கூட்டணி காட்சிகள் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் கட்சிகள் ரோடு ஷோ நடத்தலாம், கோவில் நிலங்களில் ரிசாட்டுகள் கட்டலாம், கோவில் மூலம் வரும் பணத்தை வைத்து ஆட்சி நடத்தலாம் ஆனால் இந்துக்கள் அவர்களின் உரிமையை மட்டும் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் தான் பெற வேண்டும். இது தான திமுக ஆட்சி. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் 'இந்து' என்ற பெயரை நீக்கியுள்ளது. மதுரையில் முருகன் பக்தர்கள்மாநாடு நடத்த அவ்வளவு எதிர்ப்பு, ஒரு கோவிலையே வக்பு வாரியம் என கூறியது அதை கள்ளமவுனமாக வேடிக்கை பார்த்தது, அதையும் நீதிமன்றத்தில் அந்த ஊர்மக்கள் வழக்காடி கோவிலை மீட்டர்கள். இபப்டி அடுக்கி கொண்டே போகலாம்..
இது ஒருபுறம் என்றால் முஸ்லிம், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும் பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கையை திமுக அரசு வலியுறுத்தி வருகிறது. அதுபோல, கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய வன்னியர்களுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை சில அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான சான்றிதழில், 'இந்து' என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய சில சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலின, பழங்குடியின இட ஒதுக்கீட்டை வழங்கும் தீய உள்நோக்கத்துடன் இந்த சதி வேலை செய்யப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் வலுவாக எழுதுகிறது
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில், இந்து பெயரை நீக்கிவிட்டால், இன்னும் 10 ஆண்டுகளில் அவர்கள், இந்துவே இல்லை என்று சொல்லிவிடலாம் என்று திமுக அரசு கணக்கு போடுகிறது என எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்விகளை எழுப்பிவருகிறது.
இதற்கிடையில் திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.வெங்கடேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "திருச்செந்தூர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. கோயில் இடத்தை அடக்க ஸ்தலமாக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படி, இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்ய அல்லது எரியூட்ட, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெறப்பட்ட இடங்களை தவிர்த்து, வேறு எந்த இடத்தையும் பயன்படுத்த கூடாது.
இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்யவோ, எரியூட்டவோ திருச்செந்தூரில் அரசு நிலம் இல்லை என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆனால், அரசு நிலம், நத்தம் புறம்போக்கு நிலம் இருப்பதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, திருச்செந்தூர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது. உடல்களை அடக்கம் செய்ய மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.