
இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் படு வேகமாக பரவி வருகிறது அதில்
இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் அடைந்தார். அங்கு நிறுத்தப் பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டி ருப்பதைப் பார்த்ததும், எதிரிகள் தனது நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டார்.
டஜன் கணக்கில் சடலங்கள் கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன. அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த சிப்பாய் சற்றுநேரம் நின்றார்.ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த பாதணிகளை அவர் திடீரெனக் கவனித்தார். முன்பு தனது மனைவிக்காக வாங்கி வந்த ஷூ போல் இருந்தது.
உடனே வீட்டுக்கு ஓடினார். வீட்டில் யாரும் இல்லை. வேகமாகத் திரும்பிச் வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலைப் பரிசோதித்தார். அது அவரது மனைவியேதான். அதிர்ச்சியடைந்தார்.பொதுக் கல்லறையில் மனைவியைப் புதைக்க விரும்பவில்லை என்றும் தனிக் கல்லறையில் புதைக்க விரும்பு வதாகவும் கூறி உடலைத் தருமாறு வேண்டினார். அனுமதி கிடைத்தது.
வாகனத்தில் இருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும்போது மனைவி இன்னும் உயிருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தேவையானசிகிட்சை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் உயிர் பெற்றாள் அந்த வீரரின் மனைவி.
இந்த விபத்து நடந்து பல வருடங் களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட உயிருடன் புதைக்கப்பட இருந்த அந்த மனைவி கர்ப்பமுற்றாள். ஆண் குழந்தை பிறந்தது.பிரசவம் பார்த்தவர்கள் பையனுக்கு பெயர் சூட்டினர். பெயர் என்ன தெரியுமா..?
விளாடிமிர்_புடின் அவர்தான் ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதி.இதை அமெரிக்காவின் முன்னாள் உயர்வு ஹிலாரி கிளின்டன் தனது #Hard_Choices என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்
ஒருவேளை அமெரிக்கா எதிர்ப்பு அவருடைய இரத்தத்தில் ஊறி இருக்குமா என்றால் எப்படியும் அதை நாம் ஒப்புக் கொள்ள தான் வேண்டும் என்று முடிகிறது இந்த தகவல் உண்மையா என தேடி பார்த்ததில் அது உண்மை என்று தெரியவந்துள்ளது கீழே உள்ள லிங்கில் சென்று ஹிலாரி பேசிய தகவலை பார்க்கலாம்.
https://www.buzzfeednews.com/article/andrewkaczynski/hillary-clinton-told-a-revealing-personal-story-about-vladim
உலக மக்கள் பார்வையில் புதின் புதிரான மனிதர் தான். சில ஐரோபிய ஆய்வுக் கட்டுரைகள் புதின் ஏலியன் தொடர்பில் இருப்பவர் என்றும் புதின் பிறப்பதற்கு முன்பே அவரை போலவே உருவம் கொண்டு பலர் இருந்ததாகவும் கூறுகிறது.
பின்வாங்கி போவது போல காட்டிவிட்டு நோட்டா படைகள் உக்ரைன் உள்ளே வந்த பின் மொத்தமாக செஞ்சிவிட்டு பழைய சோவியத் ஒன்றியத்தை கட்டமைக்க விரும்புகிறார் என்றே நினைக்கிறேன்.
More watch videos
