Cinema

போதை பொருளில் அமீருக்கு தொடர்பு உள்ளதா...? நண்பனுக்காக சமுத்திரக்கனி சொன்ன வார்த்தை..!

Samuthirakani, Ameer
Samuthirakani, Ameer

தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வந்தவர் சமுத்திரக்கனி, இந்த சமூகத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் சினிமா துறையில் குரல் கொடுக்கும் நட்சத்திரங்களின் வரிசையில் ஒருவர் சமுத்திரக்கனி உள்ளார். போதை பொருள் விவகாரதத்தில் நடிகர் அமீருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி அந்தர் பல்டி அடித்து தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.


சர்வேதேச அளவில் போதை பொருள் கடத்தீய வளாகத்தில் முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிகை கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர். இதில் ஜாபர் சாதிக்க காவல்துறையிடம் சில தகவல்களை வாக்குமூலம் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் அவரது கூட்டாளியை கைது செய்தனர். மேலும் ஜாபர் சாதிக் தொடபர்புடைய இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஜாபர் தனது பணத்தை கட்டுமானத்துறையிலும், சினிமா துறையிலும் முதலீடு செய்துள்ளார் என்பது குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இந்த சினிமா துறையில் இயக்குனர் அமீர் உடன் மட்டுமே ஜாபர் சாதிக் நெருக்கத்தில் இருந்தார் என்றும் பேசப்பட்டது. அப்போது எனக்கும் ஜாபர் சாதிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று விளக்கம் கொடுத்து வந்தார். ஜாபர் கைதுக்கு பிறகு அப்படியொரு விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை அமீர் பம்மிவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில் அமீரின் நெருங்கிய நண்பரான நடிகர் சமுத்திரக்கனி தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

குணச்சித்திர நடிகராக வில்லனாக என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக நடிப்பவர் சமுத்திரக்கனி. உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமா இயக்குநராக அறிமுகம் ஆனார் சமுத்திரக்கனி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படத்திலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருவார். முன்னணி நடிகர்களை கொண்டு சமுத்திரக்கனி படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் சமுத்திரக்கனி அமீர் குறித்து ஒரு தகவலை கூறியிருக்கிறார். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளால நீடித்து வரும் பருத்திவீரன் படத்திற்கு அமீருக்கு ஆதரவாக தகவல் கூறியிருந்தார்.

தற்போது அமீர் மீது வரும் பிரச்சனையே வேறு, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஜாபர் சாதிக் பிரச்சனையில் அமீர் சிக்கியுள்ளது குறித்து கேள்வி கேட்ட பொழுது, பருத்திவீரன் பிரச்சினை என்ன என எனக்கு நன்கு தெரியும். அதனால் அந்த விஷயத்தில் தலையிட்டு நான் அமீருக்காக பேசினேன். ஆனால், இந்த போதை பொருள் பிரச்சனையில் உண்மை நிலைமை என்ன என்பது குறித்து எனக்கு ஏதும் தெரியவில்லை. அதனால் அமீர் இந்த பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாமல் எப்படியாவது வெளியே வரவேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். அமீருக்கு அந்த கடவுள் தான் உறுதுணையாக இருக்க வேண்டும் என சமுத்திரக்கனி கூறினார்.

பருத்திவீரன் படத்தின் போது முதல் ஆளாக அமீருக்கு ஆதரவு கொடுத்து வந்தவர் சமுத்திரக்கனி. தற்போது போதை பொருள் விவகாரம் குறித்து பேசிய சமுத்திரக்கனி கடவுளிடம் வேண்டுகிறார். அப்போ வெளிவராத தகவல் ஒன்று சிக்கியிருக்கிறது. இல்லையென்றால் சமுத்திரக்கனி அதெயெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் கூட வேண்டியது தானே? என கேள்வி எழுந்துள்ளது. போதை போல் சம்பந்தமாக சினிமா வட்டாரத்தில் அமீரை மட்டுமே தொடர்பு படுத்தி வருகின்றனர். ஆனால், அமீர் விளக்கம் கொடுத்து வருகிறார், இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.