24 special

இந்தியாவின் அடுத்த பாய்ச்சல்.. களம் இறங்கும் 6th generation பாகிஸ்தான் சீனாவுக்கும் சிக்கல்தான்

INDIA,CHINA
INDIA,CHINA

அமெரிக்காவின் B-2 ரக விமானத்தை சீனா புகழ்ந்திருக்கிறது. தனது நட்பு நாடான ஈரான் மீது குண்டுகளை வீசிய விமானத்தை சீனா புகழ்ந்துள்ளது. 


ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்று அழைக்கப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கை  ஈரானின் அணு ஆய்வு மையங்களை தாக்கியுள்ளது. இந்த நடவடிக்கையில், B-2 விமானங்கள் எங்கும் இடைமறிக்கப்படவில்லை. 7 விமானங்களும் பத்திரமாக அமெரிக்காவுக்கு திரும்பியுள்ளன. இது சீனாவின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக இதை பயன்படுத்த சீனா அமெரிக்காவை புகழ்துள்ளது.  இந்நிலையில், ரஷ்யா தனது மேம்பட்ட சுகோய் Su-57E ஸ்டெல்த் போர் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது.  இது சீனா பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு பெரும்  அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் போரின் போது இந்தியா துருக்கியின் நவீன ட்ரோன்கள் , சீனாவின் நவீன ஏவுகணைகள் ,அமெரிக்கா வின் போர் விமானங்களை போட்டு தள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. 

நவீனப் போர் விமானங்களில் மூலக் குறியீடு என்பது வெறும் CODING அல்ல. அதுதான் ஒரு போர் விமானத்தின் மூளையாகும். போர் விமானம் எவ்வாறு பறக்கிறது ? எதிரி ரேடாரில் இருந்து எப்படித் தப்பிக்கிறது ? சூழலுக்கு ஏற்ப எப்படித் தாக்குகிறது ? மற்றும் போரின் போக்கை எப்படி மாற்றியமைக்கிறது ? என்பதை எல்லாம் இந்த மூலக் குறியீடு தீர்மானிக்கிறது.

அமெரிக்காவின் F-35 போர் விமானம் 10 மில்லியனுக்கும் அதிகமான மென்பொருள் குறியீடுகளைக் கொண்டுள்ளது.அதே போல் உலகின் அதிநவீனப் போர் விமானமான ரஷ்யாவின் Su-57E ஸ்டெல்த் போர் விமானத்தின் மூலக் குறியீடுகள் மிக அதிகமாக உள்ளன. பொதுவாக,ஒரு நாடு, இன்னொரு நாட்டுக்குப் போர் விமானத்தை விற்கும் போது விமானத்தை மட்டுமே அளிக்கும். அந்த விமானத்தின் மூலக் குறியீட்டைக் கொடுப்பதில்லை. இந்த நிலையில்  முதல்முறையாக, ரஷ்யா, தனது Su-57E ஸ்டெல்த் போர் விமானத்தின் மூலக் குறியீட்டை முழுமையாக இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது.

அதாவது, Su-57E ஸ்டெல்த் போர் விமானத்தை இந்தியாவுக்கேற்ப உருமாற்றவும், உள்நாட்டு ஆயுதங்களை ஒருங்கிணைக்கவும், அதன் செயல்பாட்டு அமைப்புகளை விருப்பப்படி மாற்றவும் ரஷ்யா அனுமதி அளித்துள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும். சுயசார்பு பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் நீண்டகால லட்சியத்தில் இது முக்கிய திருப்புமுனையாகும்.

இதன் மூலம், ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் வகைப் போர் விமானங்கள் மீது இந்தியா தனது ஆளுமையை நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஏற்கெனவே , F-35 லைட்னிங் II போர் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ள நிலையில், ரஷ்யா தனது Su-57E ஸ்டெல்த் போர் விமானத்தை மூலக் குறியீட்டையும் இந்தியாவுக்கு இருப்பது அமெரிக்காவுக்கு எதிரான ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் எனப்படுகிறது.

ரஷ்யா தனது இராணுவ வன்பொருளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் எதிர்ப்புகளையும் மீறி, 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்கு ரஷ்யா S-400 ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் Su-30MKI போர் விமானங்களை வழங்கியது. ரஷ்யாவின் இந்தப் போர் ஆயுதங்கள் இந்தியாவின் வான்வழி பாதுகாப்பின் மையமாக விளங்குகின்றனஇந்தியா ஐந்தாம் தலைமுறைப் போர் திறன்களை விரைவாகப் பெறுவதற்கான வாய்ப்பை ரஷ்யா வழங்கியுள்ளது.  ஸ்டெல்த் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட முதல் விமானம் இதுவாகும். அமெரிக்காவின் F-35 மற்றும் சீனாவின் J-20 போர் விமானங்களை விடவும் அதிநவீனப் போர் விமானமாகும்.இது  வான், தரை மற்றும் கடலில் இருந்து ஏவும் திறன் கொண்டதாகும்.10 டன் வரை வெடிமருந்துகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும். அதிநவீன ரேடாரில் சிக்காமல் தப்பித்துப் பறந்து இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் தொழிநுட்பம், Su-57E போர் விமானத்தின் சிறப்பு அம்சமாகும். இந்தியாவின் எதிர்கால ஆறாவது தலைமுறை விமான மேம்பாட்டுக்கான அடித்தளமாகவும் அமையும்.