
தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை, 3.16 சதவீதம் அளவுக்கு உயர்த்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான கட்டண விகிதங்களை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தயாராக வைத்துள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.தமிழகத்தில் வீடு, தொழில்நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கான மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியம் வழங்கி வருகிறது. மின்சார கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது.
இந்த ஆணையம் தான் மின்கட்டண உயர்வுகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும். தமிழகத்தில் ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்தும் வகையில் கடந்த 2022ம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 2022 செப்டம்பர், 10ல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் அந்த நிதியாண்டு முதல்,2026 - 27 வரை, ஆண்டுதோறும் ஜூலை, 1ம் தேதி முதல், மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது.
இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் நாளை மறுநாள் ஜூலை 1ம் தேதி வருகிறது. இதையடுத்து மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் தயாராகி வருகிறது. மின்கட்டண உயர்வு விகிதங்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தயாரித்து வைத்துள்ளது
தமிழகத்தில் இதுவரை 52 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் மேலும் 3 சதவீத மின்கட்டண உயர்வு நடைமுறைப்படுத்த இருப்பதாகவும்,. மின்சார கொள்முதல் ஊழலை சரிக்கட்டவும் தான் இந்த விலையேற்றம் என எதிர்கட்சிகள் தெரிவித்து குற்றம் சாட்டி வருகிறார்கள். திமுக அரசு கொள்ளையடிப்பதற்காக மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை திமுக அரசு வாட்டி வதைக்கிறது அதே போல் பாஜக ஆளும் ," மராட்டியத்தில் நடப்பாண்டில் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை 26% குறைக்கப் போவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் ஏற்கனவே 52 % அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது திராவிட மாடல் அரசு.
திமுக அரசின் வாக்குறுதியான மாதாந்திர மின்கட்டண கணக்கீடு வாக்குறுதி எங்கே? காற்றில் பறந்ததா?ஆவின் பால், சொத்து வரி, குடிநீர் வரி, பதிவுத்துறை கட்டணம் என ஏழை, நடுத்தர மக்களை நேரடியாகத் தாக்கும் தொடர் விலைவாசி உயர்வுகள்தான் உங்கள் திராவிடமாடலா?
இந்தக் கட்டண உயர்வை வன்மையாகக் கண்டிக்கிறோம்! உடனடியாக இதைத் திரும்பப் பெற வேண்டும்! என்ற கோரிக்கைகள் எழுந்து வருகிறது
அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவதற்கும், மராட்டியத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப் படுவதற்கும் முதன்மைக் காரணம் நிர்வாகத் திறன் தான். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிர்வாகத் திறனை பூதக் கண்ணாடி கொண்டு தான் தேட வேண்டியிருக்கிறது. மராட்டிய மாநில மின்வாரியம் நிர்வாகத்தில் சிறந்து விளங்குகிறது.
மஹாராஷ்டிராவில் அடுத்த ஐந்தாண்டுகளில் சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம், நீர் மின்சாரம் போன்ற பசுமை மின்சாரத்தை கொள்முதல் செய்வதன் மூலம் ரூ.66,000 கோடியை மராட்டிய மின்வாரியம் சேமிக்கப் போவதாக அதன் நிர்வாக இயக்குனர் லோகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அவ்வாறு சேமிக்கப்பட்ட தொகை தான் மின்கட்டண குறைப்பாக அம்மாநில மக்களுக்கு கிடைக்கவிருக்கிறது.
ஆனால், தமிழ்நாட்டின் நிலைமை முற்றிலும் தலைகீழாக உள்ளது. 2022-23ஆம் ஆண்டில் மட்டும் அனுமதிக்கப் பட்ட அளவை விட 917.6 கோடி யூனிட் மின்சாரத்தை ரூ.13,179 கோடி கூடுதலாக கொடுத்து தமிழ்நாடு மின்வாரியம் வாங்கியிருக்கிறது. சராசரியாக ஒரு யூனிட் ரூ.14.36 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்கியது தான் இதற்கு காரணம் ஆகும்.
தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களைச் சுரண்டுவதில் தான் முதலிடம் பிடித்துள்ளது. திமுகவின் கொடுங்கோல் ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு வரும் தேர்தலில் திமுகவுக்கு படுதோல்வியை பரிசாக அளிப்பார்கள்.