Tamilnadu

"தமிழக அரசையும் குறிப்பா காவல்துறையும்" கேட்டு கொள்கிறேன் நடவடிக்கை எடுக்கணும் வீரமணி ஆவேசம்!

veeramani and annamalai
veeramani and annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தங்களை பற்றி தவறான கருத்தை மக்களிடம் பரப்பி திராவிட கழகத்திற்கு என்று இருக்கும் நற்பெயரை மாற்றி அவதூறு பரப்புவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார் திராவிட கழக தலைவர் வீரமணி இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-


திராவிடர் கழகத்தின்மீது தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலை டுவிட்டரில் அவதூறுப் பிரச்சாரம் காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலை டுவிட்டரில் - கட்சியின் அதிகாரப்பூர்வமான முறையில் நேற்று (13.12.2021) பிற்பகல் 12.48 மணிக்குக் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார். இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் விபத்தில் மரணித்தது குறித்து. திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கலையும், வீர வணக்கத்தையும் ‘விடுதலை’ நாளேட்டில் 8.12.2021 அன்று வெளியிட்டுள்ளோம்.

உண்மை இவ்வாறு இருக்க, ‘திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அதிகாரப்பூர்வமான துணை அமைப்புகள் ஜெனரல் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று கொண்டாடி இருப்பதாக’ தமிழ்நாடு பா.ஜ.க.வின் தலைவர் திரு.அண்ணாமலை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.  எங்கு, எப்பொழுது திராவிடர் கழகம் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று கொண்டாடியது என்று விளக்கப்படவில்லை என்பதிலிருந்தே, இது பொய்யானது என்பது வெளிப்படை. திராவிடர் கழகத்தின்மீது பொய்யான வகையில் அபாண்டமாக அவதூறு பரப்பி, மக்கள் மத்தியில் திராவிடர் கழகத்தைப்பற்றி மோசமான அபிப்ராயம் உருவாகும் வகையில் செயல்பட்டுள்ளார்.

தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டு, 75 ஆண்டுகளுக்குமேல் - மக்கள் மத்தியில் நிலவும் தீண்டாமை, ஜாதி, மூடநம்பிக்கை இவற்றை எதிர்த்தும், சமூகநீதி, பெண்ணுரிமை, மதச்சார்பற்ற தன்மை, பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும், செயல் பாடுகளையும் மேற்கொண்டுவரும் அரசியல் சார்பில்லாத ஒரு சமூக சீர்திருத்த இயக்கத்தின்மீது அவதூறு பரப்பியுள்ள தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலைமீது சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசையும், குறிப்பாகக் காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார் வீரமணி.

வீரமணி இவ்வாறு குறிப்பிட பல பெரியாரிஸ்ட்கள் முப்படை தளபதி பிபின் ராவட் மரணத்தை கொண்டாடி இருப்பதை ஆதாரமாக ஆளுநரிடம் சமர்ப்பித்து இருக்கிறதாம் பாஜக விஷயம் விசாரணைக்கு வரும் போதுதான் யார் யார் சிக்குவார்கள் என்று தெரியவரும் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.