Cinema

ட்விட் பேக் செய்த கங்கை அமரன் "வைரமுத்து" வாஸ் அவுட், இடையில் முதல்வர் செயலும் விமர்சனம்..!

Vairamuthu,  Gangai Amaran
Vairamuthu, Gangai Amaran

கவிஞர் வைரமுத்து புகைப்படம் ஒன்றை பகிர அதனை ரீட்விட் செய்து இசை அமைப்பாளர் கங்கை அமரன் "கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே” என சூசகமாக வைரமுத்துவை கிண்டல் செய்ய அதனை பாடகி சின்மயி ரிட்விட் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


சில நாட்களுக்கு முன்னர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்  புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர், பாபி சின்கா நடிக்கும் புதிய படத்திற்கு "தடை உடை"  என்று பெயர் வைத்திருக்கிறேன். படப்பிடிப்பை தொடங்கி வைத்தேன்.

கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மாலை சூட்டி மகிழ்ந்தார்கள்.சின்ன சின்ன கொண்டாட்டங்களே வாழ்க்கை என்று பதிவிட்டிருந்தார். மேலும், அந்த புகைப்படத்தில் நடிக்கும் நாயகிகளுக்கு மத்தியில் வைரமுத்து நிற்பது போன்று இருந்தது.இந்த நிலையில் அந்த புகைப்படத்தை ட்விட் பேக் செய்து இசையமைப்பாளர் கங்கை அமரன்பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

” கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே” என்று கமெண்ட் செய்து இருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறதுஇதை பார்த்த பலரும் வைரமுத்து மீதான குற்றசாட்டுகள் குறித்து சூசகமாக கங்கை அமரன் கிண்டல் செய்து இருக்கிறார் என கூறிய நிலையில், 

சின்மயி சும்மா இருப்பாரா அவரும் தன் பங்கிற்கு இந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்து இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரமுத்து இலக்கிய உலகில் நுழைந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்து இருந்தார் இதை பார்த்து சின்மயி கொந்தளித்துப் போய்  கருத்து தெரிவித்து இருந்தார் அதில் அவர் கூறியது, இந்த wow-யை பாத்துட்டு அவர பாராட்டுறீங்களே என்று அறிவாளிகள் தான் கேப்பாய்ங்க. எத்தன பொண்ணுங்க மேல கைய்ய வெச்சாலும் எல்லா சப்போர்டும் உண்டுன்னு வெட்ட வெளிச்சமா தெரியுதே நம்ம முற்போக்கு நாட்டுல 

பெண்கள் இங்க பாதுகாப்பு எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. நாம நம்ம வேலைய பாப்போம் என பதிவிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே வைரமுத்துவிற்கு கேரள அரசின் உயரிய விருது அறிவிக்கப்பட பல்வேறு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான நபருக்கு எப்படி விருது கொடுக்கலாம் என விமர்சனம் செய்ய அதனை கேரள அரசு திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.