Cinema

சரியான ஆள் பார்த்து ஓட்டு போடுங்க ... சொன்னவரு வேற யாருமில்ல சர்ச்சை நடிகர் தான்...

VIJAY ANTONY
VIJAY ANTONY

சரியான ஆள் பார்த்து ஓட்டு போடுங்க ஆனால் நோட்டாவுக்கு மட்டுமஓட்டு போடாதீங்க அப்படின்னு இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் அட்வைஸ் பன்னியிருக்காரு.  நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னை போல் ஆயிடுமா அதே போல தான் ஆயிரம் படம் எடுத்தாலும் பிச்சைக்காரன் படத்திற்கு ஈடாகாது.  கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கோவை, சேலம், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களில் விஜய் ஆண்டனி லைவ் கான்டஸ்ட் நிகழ்ச்சி குறித்தும் மற்றும் விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ படம் வருகின்ற ரம்ஜான் அன்று வெளியாவது குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்துச்சு, அதுல பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவையில் நிகழ்ச்சி நடத்தியதும் மேலும் தற்போது அடுத்த நிகழ்ச்சி கோவையில் நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாகவும், சந்தோசமாகவும் இருப்பதாக  தெரிவிச்சாரு.


தொடர்ந்து மக்களவை தேர்தல் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், மக்களுக்காக யார் சேவை செய்றாங்களோ உழைக்கிறாங்களோ அவங்க யார்னாலும் அரசியலுக்கு வரலாம் எந்த தப்பும் இல்லை ..பொதுமக்கள் கட்டாயமாக தங்களோட வாக்க மறக்காம செலுத்துங்க அப்படின்னும், நமக்கு பிடிச்சவங்களுக்கு  வாக்கு செலுத்துவதை விட நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்று அறிந்து வாக்கு செலுத்த வேண்டும் ஏன்னா, .ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்கிறார்கள். ஐந்து நிமிடம் யோசித்து வாக்கு செலுத்துங்கள். எதிர்காலம் நல்லா இருக்கும் என்று மக்களுக்கும், வாக்கு செலுத்தும் முதல் தலைமுறைக்கும் அறிவுரை வழங்கினார். மேலும் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் மக்களுக்கு நன்மை செய்வதற்கு அரசியல் வந்து செய்ய வேண்டிய அவசியமும்  இல்லை என்றும்  தெருவாக சென்ற கூட மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று செய்தியாளர் கேள்விக்கு விளக்கம் அளித்தார்.

சின்ன படமோ பெரிய படமோ கதை நல்லா இருந்தா படம் வெற்றி பெறும் எனவும் தற்போது வெளியாகி உள்ள மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்கு எந்தவிதமான ட்ரெய்லர், பிரஸ்மீட் நடத்தவில்லை. ஆனால், மக்கள் அதனை விரும்பி பார்க்கிறார்கள். நல்ல படம் வெளியிடுவதற்கு திரையரங்கம் தேவையில்லை, சமூக வலைதளங்கள் போதும் என்று கூறினார். நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னை போல் ஆயிடுமா என்பது போல தான் ஆயிரம் படம் எடுத்தாலும் பிச்சைக்காரன் படத்துக்கு ஈடாகாது என்றும் கூறினார் .பிச்சைக்காரன் திரைப்படம் தாய் குறித்து முழுமையான ஒரு கதையாக இருந்தது போல் ரோமியோ படம்  ஒரு கணவன் மனைவிக்கு இருக்கும் பழக்கவழக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.