24 special

திருமண தடை நீங்க நீங்கணுமா....?

PERUMAL TEMPLE
PERUMAL TEMPLE

 பஞ்ச பூதங்களான வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவற்றில், வாயு பகவானுக்காக கட்டப்பட்ட  தலம் தான் இது. இந்த கோவில் 500 வருடங்களுக்கும் பழமையான சக்தி வாய்ந்த கோவில் என்று கூறப்படுகிறது. இதன் வரலாற்றை கேட்கும் பொழுது இப்படியும் கூட பக்தி இருக்க முடியுமா என்று நம்மளை ஆச்சரியப்பட வைத்துவிடும். இந்த கோவிலில் அமைந்திருக்கும் சிவபெருமான் காளத்தியப்பர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் அம்மையார் ஞானப்பிரசுனாம்பிகை பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். இங்கு அமைந்திருக்கும் காளத்தியப்பர் சுயம்பு மூர்த்தியாக அமைந்திருக்கின்றார். முன்பு ஆதிசேஷனுக்கும், வாயு தேவனுக்கும் ஏற்பட்ட போட்டியில் ஆதிசேஷன் இந்த சிகரத்தினை பெயர்த்தெடுத்தால் நீ பலமானவன் என்று ஒப்புக் கொள்கிறேன் என்று கூறினாராம்!! மேலும் ஆதிசேஷன் அந்த சிகரமே தெரியாதது போல் தனி உடலால் மூடிக்கொண்டாராம்.


அப்போது சில வருடங்கள் கழித்து தன் பலத்தினால் சிகரங்களை தேர்ந்தெடுத்தாராம். அப்போது உருவான மலை தான் இது என்று புராணங்கள் கூறுகின்றது. இது வாயு நலம் என்பதால் இங்கு பக்தர்கள் ஏற்றி வைக்கும் விளக்குகள் எப்போதும் காற்றில் ஆடிக்கொண்டே தான் இருக்குமாம்!!ராகு, கேது சரியில்லாமல் பல கஷ்டங்களை எதிர்கொள்ளும் மக்களும், சர்ப்பதோஷம் உள்ளவர்களும் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். ராசி சரியில்லாமல் நீண்ட காலமாக  பல பிரச்சனைகளை சந்தித்து வந்து, அதனை எப்படி சரி செய்வது கூட தெரியாமல் திணறி வரும் மக்கள் ஒரு முறை இந்த கோவிலுக்கு வந்து வழிகாட்டு செல்வதால் அவர்களின் பிரச்சனைகள் எல்லாம் சரியாகி, அவர்களின் ராசிகளில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி, அதன் பிறகு இந்த ஒரு பிரச்சனையும் அவர்களை அண்டாமால் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர் என்று இங்கு வரும் பக்தர்கள் பலர் கூறுகின்றனர்!! 

மேலும் பல காலமாக பேச்சு வராத குழந்தைகள் கூட இந்த கோவிலுக்கு வந்து இங்கு அமைந்திருக்கும் சரஸ்வதி தேவியின் தீர்த்தத்தில் நீராடி, அதனை அருந்தி வந்த  கூடிய விரைவில் அந்த குழந்தை நன்றாக பேசும் என்று கூறுகின்றனர். தன் குழந்தைக்கு பேச்சு வரவில்லை என்று பல பெற்றோர்கள் மருத்துவமனைகளை தேடி தேடி தங்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறார்கள். ஆனால் இந்த கோயிலுக்கு ஒரு முறை சென்று அந்தத் தீர்த்தத்தில் நீராடி அதனை பருகி வந்தால் உடனடியாக அவர்களின் குறைகள் நீங்கி விரைவில் பேசுவார்கள் என்று பலரும் கூறுகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறியவுடன். இந்தக் கோவிலுக்கு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து மேலும் கோவிலுக்கு தங்களால் இயன்ற பொருள் உதவி செய்து நேர்த்திக்கடன்கள் செலுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த கோவிலில் திருநீறு என்ற ஒன்று கொடுக்கவே மாட்டார்களாம். ஏனென்றால் இங்கு தான் கண்ணப்பர் வாய்கலசமாக முகலிநீர் கொண்டுவந்து காளத்தியப்பருக்கு அபிஷேகம் செய்தாராம். அதனால் பக்தர்களுக்கு விபூதி வழங்கும் வழக்கம் இல்லை என்று அனைவரும் கூறுகின்றனர். அப்படியே பக்தர்கள் திருநீறு கொண்டு வந்தாலும் அதனை இறைவன் காலடியில் வைத்து பூஜை செய்து அதனை திருப்பிக் கொடுத்து விடுவார்களாம். பச்சைக் கற்பூரத்தை பன்னீர் விட்டு அரைத்து தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக்கொண்டு அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றார்கள். இவ்வாறு பல அதிசயங்கள் இந்த கோவிலில் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு சென்று வந்தால் நிச்சயம் திருமணம் நடக்கும் என கூறப்படுகிறது....