Cinema

நடிகர் பயில்வான் ரங்கநாதனுக்கு ஆப்பு வைத்த திவ்யா..!


நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிகவும் அருவருக்க தக்க வகையில் பயில்வான் ரங்கநாதன் தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு வருகிறார், நஎனவே இதுபோல் பேசும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி திவ்யா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.


இதற்கு முன்பாக இணையத்தில் அவதூறாக பேசியதாக 8 பேர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது பயில்வான் ரங்கநாதன் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது சமீபத்தில் விவாகரதான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்து மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பயில்வான் ரங்கநாதன் பேசியிருந்தார், அத்துடன் முறையற்ற உறவு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது ஒருபுறம் என்றால் இயக்குனர் பாலா சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார், இதையும் பயில்வான் ரங்கநாதன் அவதூறாக பேசினார், மேலும் பாலா மனைவியை பிரிய அவரது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார். இது தனிப்பட்ட முறையில் மிகவும் அருவருக்கதக்க வகையில் இருந்தது.

இந்த சூழலில் தான் பாலாவின் முன்னாள் மனைவி பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்க திவ்யா என்பவர் மூலம் புகார் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. திவ்யா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பயில்வான் ரங்கநாதன் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இனியாவது யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவதூறு பேசாமல் இருப்பாரா? இல்லை சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி அதே தொழிலை பயில்வான் செய்வாரா? என பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.