Tamilnadu

#BREAKING திருமாவளவன் விரட்டி அடிப்பு சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம் !

Thirumavalavan
Thirumavalavan

இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் ‘146 பிற்படுத்தப்பட்ட , 115 MBC / DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் கிண்டி அருகே போராட்டம் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு இன்னும் பல சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர், அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும், இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து பேசினார் திருமாவளவன் அப்போது, யாரும் எதிர்பார்க்காத சமயத்தில்

நடைபெற்ற போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர், திடீரென மேடையின் மேல் சென்று, திருமாவளவனின் கையில் இருந்த மைக்கை பிடிங்கினார்.பிறகு, மைக்கில் பேசிய அந்த நபர், “எங்களின் சமூகத்தை பற்றி எங்களின் சமூகத்தைச் சேர்ந்தவரே பேச வேண்டும் என்று எங்களின் பொதுக் குழுவில் முடிவு செய்திருக்கிறோம். நீங்கள் ஒரு கட்சியில் இருக்கிறீர்கள் என்பதால், உங்களை பேச அனுமதிக்க முடியாது . எனவே, மேடையில் இருந்து கீழே இறங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்,” எனக் கூறினார்.

இதனைக் கேட்ட திருமாவளவன் திடுக்கிட்டு போனார். இதையடுத்து, வேறு வழியின்றி அவர் மேடையில் இருந்து கீழே இறங்கி காருக்குச் சென்றார். அப்போது, அவரை சுற்றிலும் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அவரது கார் கதவை மூட விடாமல் தனது கோரிக்கையை கூற முயன்ற கட்சி தொண்டரிடம், ஒழுங்கா கதவை மூடு என ஆவேசமடைந்தார் திருமாவளவன்.

பின்னர், தன்னை கூட்டத்திற்கு அழைத்த நபரிடம்  சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த குரல் கொடுங்கள் என்று அய்யாக்கண்ணு கோரிக்கை விடுத்தார். அப்போது, மேடையில் இருந்து தன்னை கீழே இறங்கச் சொன்ன அந்த நபர் யார் என்று திருமாவளவன் அதிர்ச்சியுடன் கேட்டார் பின்னர், அங்கிருந்து இறுகிய முகத்துடன் திரும்பி சென்றார் திருமாவளவன்.

திருமாவளவனை மைக்கை பிடிங்கி கொண்டு பேச விடாமல் மேடையில் இருந்து விரட்டி அடித்த சம்பவம் விசிக தொண்டர்கள் இடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது, இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.