Tamilnadu

கொத்தடிமை ராகம் இசைப்பு.. "அன்று தெரியாதா" தப்பிக்க முடியாது ? முதல்வர் ஸ்டாலினை பங்கம் செய்த TTV தினகரன்..!

Stallin and TTV Dinakaran
Stallin and TTV Dinakaran

மாநில அரசுகள் நிதியைபெற மத்திய அரசிடம் கொத்தடிமை போல செயல்பட வேண்டி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில் கொத்தடிமை என்றெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதெல்லாம் தெரியாதா என கேள்வி எழுப்பியுள்ளார் TTV தினகரன் இதுகுறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-


ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, "அதைச் செய்து விடுவோம் இதைச் செய்து விடுவோம்" என வீராவேசமாக பேசிவிட்டு  பதவிக்கு வந்தபிறகு, "மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருக்கிறோம்" என்று புதிய வேஷம் கட்டுவது தி.மு.கவின் வழக்கமாக இருக்கிறது.  இவர்களின் இயலாமையை மறைக்க அன்றைக்கு திரு.கருணாநிதி செய்ததை இப்போது திரு. ஸ்டாலினும் செய்கிறார். அரசு ஊழியர் சங்க மாநாட்டில் இப்படி ஓர் அடிமை ராகத்தை அவர் இசைத்திருக்கிறார். அரசாங்கத்திற்கு 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பது தேர்தல் நேரத்தில் இஷ்டப்படி வாக்குறுதிகளை அள்ளி வீசிய  போது திரு.ஸ்டாலினுக்குத்  தெரியாதா?

தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பு மட்டுமின்றி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 40க்கும் மேற்பட்ட எம்.பிக்களை வைத்திருக்கிற ஒரு கட்சியின் தலைவர் இப்படி சுய பச்சாதாபம் தேடி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்க  முயற்சிக்கலாமா? “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, தமிழ்நாட்டிலே“என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் படத்தின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்  TTV தினகரன்.