
ஒரு நாட்டின் வளர்ச்சி, அதன் உற்பத்தியையும் வர்த்தகத்தையும் நம்பியே இருக்கிறது. குறிப்பாக, ஒரு நாட்டின் கரன்சி மூலம் வர்த்தகம் செய்யப்படுவதால், அந்த நாட்டுக்குத்தான் மதிப்பு அதிகம். காரணம், அக்கரன்சியானது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுவதால் அதன் மதிப்பு தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும். தவிர, இது அதிகளவில் புழக்கத்தில் இருப்பதுடன், பயன்படுத்துவதும் எளிதாகிறது.
இதில், உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு இடையே செய்யப்படும் வர்த்தகம், அமெரிக்காவின் டாலரை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டு வருகிறது. அதாவது, உலகில் பெரும்பான்மையான பொருள் வாங்குவதற்கும், விற்பதற்கும் அமெரிக்க டாலர் மதிப்பிலேயே விலை நிர்ணயிக்கப்பட்டு, டாலரை பயன்படுத்தியே வர்த்தகம் நடைபெறுகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்காவின் டாலர் முதன்மை கரன்சியாக மாறியதால், மற்ற நாடுகளும் அதை நம்பி இருக்க வேண்டிய சூழல் ஆரம்பித்தது. அதுமுதல் உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் டாலர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இது தற்போது பல நாடுகளுக்கு பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் $1 டிரில்லியனை கடந்திருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருக்கிறார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின் அமர்வில் புதின் இதனை தெரிவித்திருக்கிறார். இது டாலருக்கு எதிரான முதற்கட்ட வெற்றியாக பார்க்கப்படுகிறது.பிரிக்ஸ் அமைப்பில் தற்போது 10க்கும் அதிகமான நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகை, உலக மக்கள் தொகையில் 40% ஆகும். அதேபோல உலக ஜிடிபியில் இது சுமார் 40% அளவுக்கு பங்களிப்பை செலுத்தி வருகிறது.
மேலும், "BRICS நாடுகள், மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பெரிய திட்டங்களைத் தொடங்குகின்றன. அணுசக்தி, விமான போக்குவரத்து, புதிய பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் பெரிய திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளன.
BRICS நாடுகளுக்குள் உறவுகளை வலுப்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஒற்றுமை, சமத்துவம் மற்றும் ஒருவருக்கொருவர் நலன்களை மதிப்பது ஆகியவற்றை நாங்கள் பின்பற்றி வருகிறோம். பிரிக்ஸில் சேர விரும்புவோருக்கு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்" என்று புடின் கூறினார்.
புதினின் இந்த பேச்சு அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு இடையில், தங்களது சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்கிறது. உலக அளவில் கொடுக்கல் வாங்கல் எல்லாம் அமெரிக்க டாலரில்தான் நடைபெறுகிறது. ஆனால் பிரிக்ஸ் நாடுகள் தங்கள் சொந்த கரன்சியில் வர்ததகம் செய்கின்றன. உதாரணமாக நாம் ரஷ்யாவிலிருந்து பெட்ரோல் வாங்குகிறோம் எனில், அதற்காக அமெரிக்க டாலரை கொடுப்பதில்லை. மாறாக இந்திய ரூபாயைதான் கொடுக்கிறோம்.இப்படி இந்தியாவின் ரூபாய் வர்த்தகத்தால் டாலர் மதிப்பு குறையும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. டாலர் ஆதிக்கம் குறைந்தால், அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கைகள் மற்ற நாடுகளைப் பாதிக்கும் விதம் குறையும்.
ஏற்கனவே இந்தியா இனி அமெரிக்கா டாலரை மதிப்பதில்லை.சவூதி அரபு நாடுகளிடம் ரூபாயில் தான் வர்த்தகம் செய்கிறது. மேலும் இந்தியாவில் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது .மேலும், சர்வதேச வர்த்தகத்தில் ரூபாய் அதிகம் பயன்படுத்தப்பட்டால், உலக அளவில் ரூபாய்க்கான தேவை அதிகரிக்கும். தேவை அதிகரித்தால்,அதன் மதிப்பும் உயரும். இது ரூபாயை ஒரு சக்திவாய்ந்த உலக நாணயமாக மாற்ற உதவும். ரூபாயின் மதிப்பு உயரும்போது, இந்தியாவுக்கு இறக்குமதிக்கான செலவு குறையும்.இத எல்லாம் மனதில் வைத்து தான் பிரதமர் மோடி காய்களை நகர்த்தி உலக வல்லரசுகளுக்கு சவால்விட்டு வருகிறார்.
ஆக சுற்றி வளைத்து பார்த்தால், பிரிக்ஸ் வர்த்தகம் நமக்கு நன்மையைதான் ஏற்படுத்தியுள்ளது. உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைப்பதான் BRICS நாடுகளின் நீண்டகால இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது