
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இப்போதிருந்தே தமிழ்நாடு அரசியல் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் தங்களின் வியூகங்களில் தீவிரமாகி வருகின்றன. ஆளும் திமுகவை எதிர்க்க அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. அவர்களுடன் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவார்கள் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரபல தமிழ் நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலை மையமாக வைத்து மேலும் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. "2026 தேர்தலில் வெற்றி பெற்றால் அதிமுக தலைமையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமையும்." என்றும் அதிமுகவை சேர்ந்தவர் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார்கள்." என்று அமித்ஷா பதில் அளித்துள்ளார். இதை விவாதம் ஏற்படும் வகையில் பேசியுள்ளதாக கூறி கூட்டணியில் கல் எரிய ஆரம்பித்து விட்டார்கள்.
இதற்கிடையில் தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் தான் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளது. இதனால் பாஜகவினர் கொண்டாடி வருகிறார்கள்.
அண்ணாமலைக்கு தேசியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அமித்ஷா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
அமித்ஷா இப்படி கூறியதை தொடர்ந்து பல்வேறு யூகங்கள் கிளம்பின. அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பொறுப்பு வழங்கப்பட உள்ளது. அதன்பிறகு அவர் மத்திய அமைச்சராக்கப்படுகிறார் என்ற தகவல்கள் பரவின. ஆனால் பாஜக மேலிடம் சார்பில் அதுதொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் நாளிதழுக்கு நேர்காணல் வழங்கிய அமித்ஷாவிடம் இதுகுறித்து மீண்டும் கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த அமித்ஷா, "ஆம் நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அவருக்கு தேசியளவில் பொறுப்பு வழங்கப்படும்." என்று மீண்டும் கூறியுள்ளார். தேசியளவில் பொறுப்புகள் வழங்கப்பட்டாலும் மாநில அளவில் அண்ணாமலை முக்கிய பங்காற்றுவார் என்று அமித்ஷா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பாஜகவினர் மற்றும் அண்ணாமலை ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான தருண் விஜய், அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தருண் விஜய் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருக்கமான பந்தம் கொண்டவர். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வா இந்தி பத்திரிகையான பஞ்சஜன்யாவின் ஆசிரியராக 1986 முதல் 2008 வரை பொறுப்பு வகித்தவர். அதன்பிறகு ராஜ்யசபா எம்பியாக செயல்பட்டார்.
தருண் விஜய் திருக்குறள் மற்றும் திருவள்ளூவர் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் திருக்குறளை மேற்கொள் காட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் ‛‛இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல்'' - (திருக்குறள் 517) என்னும் வள்ளுவர் குறளுக்கு பொருத்தமாக தேசிய தலைமையால் பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் அண்ணாமலை அண்ணா, உங்கள் தலைமைப்பயணம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் அண்ணாமலைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அதன்படி கர்நாடகாவில் மைசூர் மன்னர் வாரிசும், குடகு - மைசூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்பியுமான யதுவீர் உடையார் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள அண்ணாமலைக்கு வாழ்த்துகள். இந்த முக்கிய பொறுப்பில் அவர் வெல்லவும், நாட்டுக்கு தொடர்ந்து சேவையாற்றவும் வாழ்த்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.அண்ணாமலை ரிட்டர்ன் திமுக மத்தியில் பெரும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்கத்தில் 30 மாவட்டங்களை குறிவைத்து அண்ணாமலையின் செயல்பாடுகள் இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.