24 special

மோடி சர்க்காருக்கு அமலா ஷாஜியின் ஆதரவா?? இணையத்தில் பரவும் புகைப்படம்!!!

AMALASHAJI, PMMODI
AMALASHAJI, PMMODI

 முன் இருந்த காலங்களில் எல்லாம் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளை மட்டும்தான் பிரபலங்கள் என்று கூறி ரசிகர்கள் அதிக அளவில் இருப்பார்கள். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களின் பின்னால் ரசிகர்களின் கூட்டம் போட்டோ எடுப்பது, ஆட்டோகிராப் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவார்கள். ஆனால் இப்போது மொபைல் ஒன்றை வைத்துக்கொண்டு திரைப்படங்கள் போன்றவற்றில் எதுவுமே நடிக்காமல் மொபைல் வைத்து வீடியோக்களை எடுத்து அவற்றை youtube, instagram மற்றும் ஃபேஸ்புக் போன்ற இணையதளங்களில் ஒரு கணக்கை ஆரம்பித்து அதில் பதிவிட்டு அதிக அளவில் ரசிகர்களை பெற ஆரம்பித்துவிட்டனர். அதுபோல தான் தனது திறமையை பயன்படுத்தி சொந்த உழைப்பில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு இன்று ஒரு செலிபிரிட்டியாக இருந்து வருகிறார் அமலா ஷாஜி!! அமலா ஷாஜி கேரள மாநிலத்தை சேர்ந்த திருவனந்தபுரத்தில் தனது பெற்றோர் மற்றும், சகோதரி ஆகியோருடன் இணைந்து வசித்து வருகிறார்.


இவருக்கு நடனம் ஆடுவது நடிப்பது போன்றவற்றில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் கொரோனா லாக்டவுன் காலத்தில் டிக் டாக் என்ற செயலியின் மூலம் தனது திறமையை காமித்து வந்தார். டிக் டாக் இல் இருந்தபோதே அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருந்தனர். மேலும் டிக் டாக் குயில் என்றும் அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டார். அதன் பிறகு டிக் டாக் பேன்ஸ் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக instagram போன்றவற்றில் ரீல்ஸ் செய்து அவற்றை பதிவிட்டு வந்தார். டிக் டாக் எந்த அளவிற்கு அவருக்கு ஆதரவு கிடைத்ததோ அதைவிட பல மடங்கு இன்ஸ்டாகிராமில் அவருக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். மேலும் youtube இல் அமலா அம்ருதா என்று இவரும் இவரின் சகோதரியும் சேர்ந்து ஒரு youtube சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். தற்போது அதிக அளவில் ரசிகர்களை பெற்றுள்ள இன்ஸ்டாகிராம் பிரபலங்களில் ஒருவராக அமலா ஷாஜியும் இருந்து வருகிறார். இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் நன்றாக பேசத் தெரிந்தவராக இருக்கிறார். ஆனாலும் இவருக்கு தமிழ்நாட்டில் அதிக அளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். 

இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பணத்தை முதலீடு செய்து அவற்றை இரட்டிப்பாகும் திட்டத்திற்கு விளம்பரப்படுத்தி அதில் மோசடி ஏற்பட்டு சர்ச்சையில் மாற்றி இருந்தார். ஆனால் விசாரித்து பார்க்க போலீசார்கள் இவரும் வந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளார் என்று கூறினார்கள். அமலா ஷாஜி செய்த விளம்பரத்தை பார்த்து அவரின் ரசிகர்களும் அதிக அளவில் இந்த மோசடியில் சிக்கினார்கள். இதைத்தொடர்ந்து தற்போது 2024 ஆம் ஆண்டில் நடந்த முடிந்த தேர்தலில் அமலா ஷாஜி முதல்முறையாக தனது வாக்கினை செலுத்தி விட்டு, ஓட்டு செலுத்தியதற்காக மை பூசப்பட்ட விரலுடன் புகைப்படம் எடுத்து இணையதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும் இந்த புகைப்படத்தை பதிவிடும் பொழுது 1st vote for modi sarkar என்ற hastag உடன் கூடிய பதிவினை பதிவிட்டுள்ளது அவரின் ரசிகர்களின் மத்தியிலும் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஏனென்றால் ஏற்கனவே இரண்டு முறை பிரதமர் மோடி ஆட்சி பெற்று இருந்த நிலையில் மீண்டும் அவரை ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிக அளவு ரசிகர்களை பெற்றுள்ள அமலா மோடி ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இப்படி நேரடியாக ஒரு பதிவினை செய்திருப்பது ரசிகர்களின் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. மேலும் இந்தப் பதிவு அமலா ஷாஜியின் வரப்பூர்வ அக்கவுண்டில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளதா?? என்பது மட்டும் அதிகாரப்பூர்வமாக தெரியப்படவில்லை!!! மேலும் ஒரு சிலரிடம் விசாரிக்கும்போது அமலா ஷாஜி தனது வாட்ஸாப்ப் சேனலில் இந்த புகைப்படத்தை பதிவிட்டதை யாரோ எடிட் செய்து இப்படி இணையத்தில் பதிவிட்டுள்ளனர் என்றும் கூறுகின்றனர்...