24 special

ஆப்ரிக்கா வாடகை வீடியோ... சின்ன பய மொத்த நாடகத்தையும் சுக்கு நூறா நொறுக்கிட்டான்... கப் சுப்பான திமுக...!

MKSTALIN,TANZANIAN INDIGENOUSPEOPLE
MKSTALIN,TANZANIAN INDIGENOUSPEOPLE

தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஸ்டிக்கர் அரசியல், விளம்பர அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு  சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதற்கேற்றாற் போல் தான் திமுகவும் சரி தமிழக முதல்வரும் செயல்பட்டு வருகிறார்கள். அமெரிக்க நாட்டில் சைக்கிள் ஓட்டுவது 


சென்னை OMR சாலையில் சைக்கிள் ஓட்டுவது .ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்தார். தடியுடன் நடை பயிற்சி செய்தார் தெரு ஓர டீ கடையில் டீ குடித்தார் கரும்பு தோட்டத்தில் காங்கிரீட் சாலை போட்டு நடந்தார். பக்கத்து தெருவில் குடிசைகள் பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில் தெருவில் அடுத்த தெருஸில் திமுக மகளிர் அணியின் நடனத்தை பார்த்து ரசித்தார். இப்படி எல்லாம் விதம் விதமாய் போட்டோ சூட் செய்து விளம்பரம் செய்து வந்தார்கள். 

இப்போது, அவை அனைத்தையும் மிஞ்சிய ஒரு விளம்பரம் சமூக ஊடகங்களில் திமுக ஊடக பிரிவு பரவ விட்டு உ‌ள்ளது. 

ஆப்பிரிக்கா நாடான தான்சானிய நாட்டு பழங்குடி மக்கள், தமிழக முதல்வர் பழங்குடி மக்களுக்கு செய்து வரும் சேவையை பாராட்டி, நடனம் ஆடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்று அந்த தகவல் கூறுகிறது. இது உண்மை தானா, என்று உண்மை அறிதல் மூலம் (fact checking) கேட்கப் பட்டு அதற்கான பதிலும் பெறப்பட்டு உள்ளது. 

நம் ஊரில் உள்ளது போல் தான்சானிய நாட்டிலும் கரகாட்ட குழுக்கள் உள்ளன. யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு ஆன் லைன் மூலம் 40 டால‌ர், ஆதாவது சுமார் ரூ 3800 அனுப்பி கொடுத்தால், யாருக்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் ஆட்டம் போட்டு வாழ்த்து தெரிவித்து நடனம் ஆடுவார்கள் என்பது fact check மூலம் தெரிய வந்துள்ளது. 

ஸ்டாலின் அவர்களின் புகழ் இந்தியாவில் மட்டும் அல்லாது, உலக நாடுகளிலும் பரவி உள்ளது என்பதைக் காட்டவும், தமிழகத்தில் உள்ள பழங்குடி மக்களின் ஓட்டை பறிக்கவும் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது என்று கூறப் படுகிறது. உண்மையில் பழங்குடி மக்களுக்கு நிறைவேற்றப் படும் திட்டங்கள் எல்லாம் மத்திய அரசின் திட்டங்கள் ஆகும். நாடு ஒருசேர முன்னேற வேண்டும் என்றால், சமூகத்தில் அடித்தட்டு வாழ்க்கை நடத்தும் பழங்குடி மக்களையும் முன்னேற வைக்க வேண்டும் என்ற சிந்தனையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கு முதல் படியாக பழங்குடியினம் சார்ந்த ஒருவரை இந்த நாட்டின் தலைமகளாக (president of India) நியமித்து உள்ளது மோடி அரசு. 

பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, மாநில அரசு பங்களிப்புடன் 79,156 கோடி ரூபாய் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. மொத்த ஒதுக்கீட்டில், மத்திய அரசு ப‌ங்கு 56,333 கோடியாகவும் (72 சதவீதம்) மாநில அரசு பங்கு 22,823 (28 சதவீதம்) கோடியாகவும் இருக்கும். இந்த மத்திய அரசின் திட்டத்தின் நோக்கம்  மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  அனைவருக்கும் மின்சார திட்டம் மூலம்  மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

தரமான  கல்வியை  பழங்குடி மாணவர்களுக்கு மதிய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் கொடுத்தல், அவர்கள் தங்கி படிக்க ஏதுவாக, பழங்குடியினர் விடுதிகளை  அமைத்தல். பழங்குடியின குடும்பங்களுக்கு தரமான சுகாதார வசதிகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்தல், என இ‌ந்த பழங்குடி இன மக்கள் மேம்பாட்டு திட்டங்கள் எல்லாம் மத்திய அரசின் 72 சதவீத நிதி ஒதுக்கீடு மூலம் செயல் படுத்தப் படும் திட்டங்கள் ஆகும். ஆயினும் மாநில அரசு இது தங்களின் திட்டம் போல் ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்து வருகிறார்கள்.இது திமுகவின் விளம்பர உத்தி இந்தியாவில் மட்டுமல்ல..உலகத்திலேயே இப்படி ஒரு விளம்பரத்தை பார்க்க முடியாது என கழுவி ஊத்தி வருகிறார்கள்.