
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்துக்கள் மத்தியில் பெரிய எழுச்சி ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, சென்னிமலையில் தொடங்கி, திருப்பரங்குன்றத்தில் மையம் கொண்டு தற்போது மதுரையில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு முடிவுரை எழுதப்படுகின்றது என மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் முருக பக்தர்கள் மாநாட்டை எதிர்ப்பதால் பலம் கூடிக் கொண்டிருக்கிறது. இந்த மாநாடு தமிழகத்தில் பெரிய திருப்புமுனையாக அமையும். என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதால் திமுக தரப்பு கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
ஏற்கனவே சென்னிமலை , திருப்பரங்குன்றம் போன்ற பிரச்னைகளில் தன்னெழுச்சியாக முருகபக்தர்கள் கூடினார்கள். என்பது அனைவரும் அறிந்ததே. இந்த இரு விஷயங்களிலும் திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக தான் செயல்பட்டது என இந்து முன்னணி போன்ற அமைப்புகள் குற்றம் சாட்டின. குறிப்பாக தீர்ப்பரங்குன்ற மலைக்கு வந்த வக்பு வாரிய தலைவரும், திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி யுடன் வந்தவர்கள் பார்சலாக வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியாது முருக பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வாயை திறக்கவில்லை முதல்வர் மற்றும் அதன் அமைச்சர்கள்.
இந்த நிலையில் இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றின் சார்பில் மதுரையில் ஜூன் 22 அன்று நடைபெறவுள்ள “முருக பக்தர்கள் மாநாடு” நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு அறிவிக்கப்பட்ட நாள் முதலே திமுக மற்றும் அதன் கட்சியினருக்கு கிலியை ஏற்படுத்தியது. தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.இதில் காங்கிரசின் செல்வப்பெருந்தகை .இந்துக்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் முருகன் மாநாட்டை குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்களில் நடத்துவார்களா? விநாயகரை தமிழக மக்கள் வணங்கும்போது முருகரை குஜராத் மக்கள் ஏற்க மாட்டார்களா என்ன? கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு வட மாநிலங்களில் கார்த்திகேயா என முருகனை வழிபட்டு தான் வருகிறார்கள். மேலும் பக்ரீத் கிறிஸ்துமஸ் எந்த நாட்டின் பண்டிகை என நெட்டிசன்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளார்கள்
ஏற்கனவே குஜராத், வாரணாசி போன்ற இடங்களில் காசி தமிழ் சங்கமம் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் முருகன் மாநாட்டை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் வைகாசி விசாகத் திருநாள் முருகன் அருள்புரிகின்ற நாளில் மும்பை நகரில் வேல் யாத்திரை நடைபெற்றுது
மும்பையில் பாரதிய கலாச்சார நம்பிக்கையை வெளிப்படுத்தும். செல்வ பெருந்தகை கூறி ஒரு நாள் ஆவதற்கு முன்னரே மும்பையில் வேல் யாத்திரை நடத்தி காங்கிரசின் முகத்தில் கரியை பூசியுள்ளார் மும்பையின் பாஜக சட்ட மன்ற உறுப்பினர்.
இதற்கிடையே கந்தசஷ்டி கவசத்தை இழிவாக பேசிய திகவினர் முருக மாநாடு நடத்த கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துளார்கள்
இந்துக்களின் திருவிழா நடக்கக்கூடாது அப்படி நடந்தால் அது நாகரிகம் இல்லாத செயல். இந்துக்கள் மாநாடு நடத்த கூடாது, இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க கூடாது என்பதில் திமுக மற்றும் கூட்டணியினர் கண்ணும் கருத்துமாக செயல் பட்டு வருவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.