24 special

மதுரையிலிருந்து அமித் ஷா டெல்லி சென்றதும்.... டெல்லியில் இருந்து வந்த செய்தி..அதிர்ச்சியில் ஸ்டாலின்.. 2026 மொத்தமும் முடிந்தது.

AMITSHA,UDHAYANIDHISTALIN
AMITSHA,UDHAYANIDHISTALIN

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். கடந்த இரண்டு நாட்களாக அங்கே ரெய்டு நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.இதில் பல ஆதாரங்கள் சிக்கியது. 


மேலும் திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான எல்லோரும் குறி வைக்கப்பட்டு உள்ளனர். திமுக செய்யும் அணைத்து செயல்களும் அவர்களுக்கே திரும்பி விடுகிறது. கால் வைக்கிற இடம் எல்லாம் கண்ணிவெடி என்று சொல்வது போன்று திமுகவிற்கு எல்லா திசைகளிலும் இருந்து ஆபத்து சுற்றி வளைத்து நிற்கிறது. மேலும் அமித் ஷா மதுரை வந்து சென்றுள்ள நிலையில் அமலாக்கதுரையின் வேகம் சூடு பிடிக்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. 

உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நட்பு வட்டாரங்களான ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கர், விக்ரம் ஜூஜூ ஆகியோரை கையில் ஆதாரத்துடன் நெருங்கிவிட்டதாம் அமலாக்க துறை.எந்த நேரமும் விக்ரம் பாஸ்கர், ரத்தீஷ் விக்ரம் ஜூ ஜூ இவர்கள் மூவரும் அமலாக்க துறையால் கைது செய்யப்படலாம் என்கின்ற பரபரப்பு நீடித்து வந்து கொண்டிருக்கிறது. எப்போது கைது செய்யப்படுவார்கள் என எதிர்க்கட்சியினர் ஆர்வத்தை விட திமுகவினருக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டுள்ளதாம். குறிப்பாக கோபாலபுர பெண்வாரிசு தான் அமலாக்கத்துறை வரும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறாரம். 

மத்திய பாஜகவுக்கு தென்இந்தியாவில்  தற்பொழுது தலைவலியாகவும், சவாலாக இருந்து வருகிறது திமுக. இதற்காகவே மீண்டும் திமுக எந்த ஒரு காரணத்திற்காகவும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்து விடக்கூடாது, அதற்காக நாம் திமுகவை வீழ்த்த எந்த எல்லைக்கும் செல்ல வேண்டும் என்பதில் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென் இந்தியாவில் பாஜகவின் வளர்ச்சி அதிகமாக உள்ளதாக சர்வே ரிப்போர்ட் கூறியள்ளது. தெலுங்கானாவில் பாஜக அடுத்த முறை ஆட்சியை பிடிக்க வாய்ப்புகள் அதிகம் என கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது. ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணி தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது.  கர்நாடகாவில் எதிர்கட்சியாக உள்ளது. கேரளா மற்றும்  தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி விகிதம் அதிகமாகி வருகிறது இந்த நிலையில் தான் திமுகவுக்கு எதிராக அரசியல் நகர்வுகளை கொண்டு செல்கிறது. 

இதற்கிடையே திமுக அமைச்சர்களின் பழைய வழக்குகள் வேகம் பிடித்துள்ளது. மற்றொரு   டாஸ்மாக்  ஊழல், மின்சார துறை ஊழல், கனிமவள கொள்ளை என மெகாஊழல்கள் வரிசைகட்டி நிற்கிறது. இவை அனைத்தையும் துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாம்  டெல்லி வட்டாரங்கள் தாஸ்மாக் வாழக்கில் உதயநிதி நண்பர்களான ஆகாஷ் பாஸ்கர் , ரத்தீஷ், விக்ரம் ஜூ ஜூ, மற்றும் பல திரை பிரபலங்களையும் கைது செய்வதற்கு தயராகி உள்ளது. 

மேலும் அமித்ஷா  கடந்த முறை அமித்ஷா கோவை வந்து சென்ற பின்பு டாஸ்மாக் நிறுவனங்களை குறி வைத்து அமலாக்கத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது. இந்நிலையில் தற்பொழுது மதுரை வந்து டாஸ்மாக்கில் 35ஆயிரம் கோடி ஊழல் என வெளிப்படையாக பேசியுள்ளது திமுகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்சிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தை மிக சரியாக கனிமொழி ஒரு பக்கம் செய்து வந்தாலும், தற்பொழுது உதயநிதியை விட கனிமொழிக்கு கட்சியின் மூத்த தலைவர்களின் ஆதரவும் பெருகி வருவதால் கூறப்படுகிறது.