24 special

போடு போட்டு தாக்கிய ஓபிஎஸ்... முடிகிறது சகாப்தம்...!

Mk stalin,  o paneersekvam
Mk stalin, o paneersekvam

திமுகவை சேர்ந்த a. ராசா பேசிய பேச்சுக்கள் பெரும் பின்னடைவை திமுகவிற்கு கொடுத்துள்ள சூழலில் ஆ.ராசா பேச்சிற்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர், அதில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டம் ஒன்றில் கடுமையாக ராசா பேச்சை விமர்சனம் செய்துள்ள நிலையில் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்.,


'இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தி பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்ற சூழ்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் மதநல்லிணக்கத்திற்கு எதிரான பேச்சை பேசி இருக்கிறார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டு எம்.பி.யாக பதவி வகித்துக் கொண்டிருக்கின்ற ஒருவர்,


இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தை இழிவுபடுத்துவதற்கு சமம்.இதைப்பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் வாய் திறக்காமல் இருப்பது திமுக இதை ஊக்குவிக்கிறதோ என்கிற சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்பி இருக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது அவர் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் சென்றது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஆ.ராசாவின் பேச்சுக்கும், அதனைக் கண்டிக்காத தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.திமுகவில் இருப்பவர்கள் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்று சொல்லும் முதல்வர் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் முரணான வகையில் இந்துக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருக்கும் ஆ.ராசாவின் கூற்றைக் கண்டிக்காதது மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய ஒன்று.


அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் முதலமைச்சர் என்பதையும், மத நல்லிணக்கத்திற்கு எதிரான இதுபோன்ற செயலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு சட்டம்- ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரின் கடமை என்பதையும் கருத்தில் கொண்டு ஆ.ராசா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மதத்திற்கு எதிரான பேச்சுக்கள் இனி வரும் காலங்களில் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.' என வலியுறுத்தியுள்ளார்.

ராசாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரு வரிசையில் திரண்டுள்ளனர் அதுமட்டுமின்றி திமுகவின் கூட்டணி கட்சியும், திமுகவின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற கொங்கு ஈஸ்வரன் கடுமையாக ஆ. ராசா பேச்சை கண்டித்துள்ளார் இந்த சூழலில் ராசா பேச்சு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக சகாப்தத்தை முடிவிற்கு கொண்டு வரும்  என்று எதிர்பார்க்க படுகிறது.