24 special

நேற்று அண்ணாமலை சொன்ன கோட்டூர் ரகசியம் .. உள்ளே இறங்கும் சி.பி.ஐ.. அடியோடு மாறிய தமிழக களம். திமுக பெரும் ஷாக்!

DMK,ANNAMALAI
DMK,ANNAMALAI

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை  திமுக அனுதாபி ஞானசேகரன் என்பவன்  கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்தான் . இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த ஞானசேகரனை கைது செய்தனர்.இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கபட்டது 


இதற்கிடையே பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறை வழக்கில் , முறையான விசாரணை நடைபெறவில்லை. இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால்தான், உண்மையில் என்ன நடந்தது என்பது முழுமையாகவெளிப்படும் என அண்ணாமலை கூறியதாவது : .டிச., 24 ம் தேதிதான் பல பிரச்னைகள் நடந்தது. அன்றைய நாள் மிகவும் முக்கியமான நாள். அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் ஞானசேகரனை கைது செய்து அன்றைய தினம் விடுவித்தனர். அன்று காலை, திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகத்திற்கு முதலாவதாக, மா.சுப்பிரமணியத்தின் உதவியாளர் துளசி தொலைபேசியில் அழைத்தார் அன்று மாலையே மா.சுப்பிரமணியமும், கோட்டூர் சண்முகமும் நேரடியாக பேசியுள்ளார்கள். 

24ம் தேதி ஞானசேகரன் வெளியில் வந்தவுடன்  இரவு 8:32 மணிக்கு கோட்டூர் சண்முகத்திடம் மா.சுப்பிரமணியன் பேசினார். பிறகு, அடுத்ததாக கோட்டூர் சண்முகமும், அண்ணா பல்கலை முன்னாள் பிஆர்ஓ நடராஜனிடம் தொலைபேசியில் பேசினார்.8:34 மணிக்கு கோட்டூர் சண்முகமும், நடராஜனும் பேசினார். இதை சிறப்பு புலனாய்வு குழு என்னிடம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்.இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை, நீதிமன்ற விசாரணை யாருக்கும் தெரியாது.தீர்ப்பு வந்த பிறகு தான், இரண்டு தரப்பும் வழக்கறிஞர்கள் சொல்வதை வைத்து தான், என்ன ஆதாரம் வைத்துள்ளனர். வைக்கவில்லை என தெரியும்.

பாலியல் விவகாரத்திற்கு பிறகு, ஞானசேகரன் கிண்டி சட்டம் ஒழுங்கு எஸ்ஐ குணசேகர கண்ணனிடம் பேசினான். இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கவில்லை. அன்றைய தினம் அவரிடம் இரண்டு முறை பேசி உள்ளான். அது குறித்து அரசு எஸ்ஐடி பதில் சொல்ல வேண்டும்.24ம் தேதி ஞானசேகரன் காவல் நிலையம் செல்லும்போது கோட்டூர்புரம் எஸ்ஐ கோவர்தன் தொடர்ச்சியாக  திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகத்திடம் ஏன் பேச வேண்டும்.அதனை தொடர்ந்து சம்பவம் முடிந்து அடுத்த 5 நாட்கள்பேசவில்லை.  25ம் தேதி தான் சம்பவம் நடந்தது தெரியும்.24 ம் தேதி போலீஸ் நடவடிக்கையின் போது ஏன் இவ்வளவு உரையாடல் நடக்கவேண்டும். என பல கேள்விகளை முன் வைத்துள்ளார் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை. 

மேலும் அவர் கூறுகையில் : அண்ணா பல்கலை மாணவியின் வழக்கறிஞரை கண்டுபிடித்து மேல்முறையீடு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளேன்.சிபிஐ விசாரணை கேளுங்கள் என சொல்வேன். சிபிஐ முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். ஞானசேகரனிடம் கைப்பற்றப்பட்ட மொபைல்போனில், வேறு வீடியோ இருந்தது. அந்த வீடியோவில் இருப்பவரை கண்டுபிடிக்க எஸ்ஐடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தடயவியல் சோதனையில் மற்றொரு வீடியோவும் இருந்தது. அதில் இருந்த பெண்ணை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பட்டும் பதில் சொல்கிறேன்.

நீதிமன்றத்தை பொறுத்தவரை, போலீசாரின் குற்றப்பத்திரிகை, ஆதாரத்தை வைத்துதீர்ப்பு சொல்கின்றனர். வேறு எதுவும் தெரியாது. இதனால், நீதிமன்ற அவமதிப்பு என்னிடம் மிரட்ட வேண்டாம். இந்த வழக்கு சி.பி.ஐ.,யிடம் செல்ல வேண்டும். வேறு யாரும் அவதூறு வழக்கு தொடர்ந்தாலும் கவலையில்லை. பாதிக்கப்பட்ட மாணவியை மேல்முறையீடு செய்ய வைக்க நான் தனிப்பட்ட முறையில் இறங்கி உள்ளேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார். இது திமுக தலையில் பேரிடியை இறக்கியுள்ளது.