24 special

சுந்தரவள்ளி வாய் சேதாரம்... "போலீஸ் சம்மன்" அதிரடி காட்டும் ரியல் தமிழச்சி..!

Sundaravalli
Sundaravalli

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தமிழச்சி பெரியாரியம் என்ற பெயரால் அப்பாவி பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாவது குறித்து பல்வேறு கருத்துக்களை ஆதாரங்களை தெரிவித்து வருகிறார், இந்த சூழலில் தமிழச்சி குறித்து போலியான தகவலை பரப்பிய பவானி என்ற பெண்ணிற்கு போலீஸ் சம்மன் அனுப்பிய நிலையில் அவர் தலைமறைவாகி இருப்பதாக தமிழச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.


இந்த சூழலில் தமிழச்சி சுந்தரவள்ளி குறித்து தெரிவித்த தகவல் பின்வருமாறு :- 01 மார்ச் 2022 இல் விவாதம் ஒன்றில்  பெரியார் சரவணன், சுந்தரவள்ளி அதில் கலந்து கொண்டு என்னை கடுமையாக விமர்சித்து இருந்ததாகவும் கூறி, நடைபெற்ற விவாதம் முழுவதையும் தோழர் ஒருவர் எனக்கு அனுப்பி இருந்தார்.

"இளைஞர்களை தன்வசப்படுத்தி தனது காம இச்சையை பூர்த்தி செய்யும் பிரான்ஸ் தமிழச்சியின் முகத்திரையை கிழிப்போம்" என 'போஸ்டர் வேறு, போஸ்டரில், "பெரியார் சரவணன் - திராவிடர் கழகம்" என்று அடையாளப்படுத்தியதை 'திராவிடர் கழகம்' மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அந்த நபர், 'அரசியல் அனாதை' எந்த கட்சியிலும், அமைப்பிலும் இல்லாமல் பாலியல் குற்றச்சாட்டுக்களினால் புறக்கணிக்கப்பட்டவன் என்றால் மரியாதை இருக்காது என திராவிடர் கழகம் முத்திரையை இணைத்துக் கொண்டது எத்தனை அயோக்கியத்தனமோ அத்தனை அயோக்கியத்தனமானது சுந்தரவள்ளியும் அவனும் பேசிய பேச்சுக்கள்.  

கொளத்தூர் மணி, சுந்தரவள்ளி, ஓவியா, சுபவீ போன்றவர்களின் பின்னே ஒளிந்து கொண்டு, திராவிடம் என்னும் முகமூடியை மாட்டிக் கொண்டு, "தமிழச்சி தான் காமக் கிழத்தி" என்பதை சுந்திரவள்ளியும் ஆமோதிக்கிறார்.  தவிர, "லூலு குழுவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை முடிந்தால் தமிழச்சி ஆதாரத்தை வெளியிடுவாரா?" என சவால் வேறு.

"திருமணம் தாண்டிய உறவு கொள்வது தவறல்ல, நாம் சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்யவில்லை. இதை குறித்து சுந்தரவள்ளியிடம் பேசிவிட்டேன். தமிழச்சியை கண்டு கொள்ளாமல், பதில் கொடுக்காமல் விட்டுவிட்டால் நாலு நாள் கத்திவிட்டு அடங்கிவிடுவாள் என 2020இல் பிரச்சனை ஆரம்பித்தே தொடக்கத்திலேயே அக்குழுவில் உள்ள பவானி (பெரியார் சரவனனின் காதலி) யிடம் கூறினார் சுந்தரவள்ளி.  

என் விமர்சனங்களை 'தமிழச்சியிசம்' என நக்கலாக எதிர் கொண்டார் சுந்தரவள்ளி. பொதுதளத்தில் வெளிப்படையாக தன்னை 'காதலி' என அழைக்கும் உரிமை கொண்ட பெரியார் சரவணனை தன் குடும்ப நண்பர் என கூறி, தொடர்ந்து அந்த நபரை காப்பாற்றிக் கொண்டிருக்கும் சுந்தரவள்ளி "அவன் குற்றவாளி என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் நானே அவனை விமர்சிப்பேன்" என்கிறார்.

எத்தனையோ ஆதாரங்களை நாங்கள் வெளியிட்ட பிறகும் 'ஆதாரம், ஆதாரம்' என்றால் இதற்கு மேல் சுந்தர வள்ளி தன் வாயை சேதாரம் ஆகாமல் பார்த்துக் கொள்ள முயற்சிக்கவும். வாய் வியாபாரிக்கு அறம், நீதி கிலோ என்ன விலை? என கேள்வி கேட்கும் அளவிலேயே தன் 'தராதரம்' இருக்கிறது என்பதை லூலு குழு பெண்களிடம் அலம்பிய வாய் வியாபாரமே இங்கேயும் சாட்சி!

திராவிடத்தை எந்த கொம்பனாலும் வேரறுக்க முடியாது உண்மைதான். ஆனால் திராவிட மைனர் குஞ்சுகளை அறுத்தெறிய எங்களால் முடியும் என குறிப்பிட்டுள்ளார் தமிழச்சி தொடர்ந்து தான் சார்ந்த கொள்கையில் உறுதியாக இருக்கும் தமிழச்சி பெரியாரியம் என்ற பெயரில் பல நபர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் நபர்களை சிறையில் தள்ளாமல் ஓயபோவது இல்லை என நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.