24 special

ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் முகேஷ் அம்பானிசெய்த காரியம் வைரல்....

anant ambani, mukesh ambani
anant ambani, mukesh ambani

ஒரு இந்திய பில்லியனர் தொழிலதிபர். சர்வதேச அளவிலான டாப் 10 பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஒரு இந்தியர் ஆவார். சந்தை மதிப்பின் அடிப்படையில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று... அவர் 1985 இல் நீதா அம்பானியை மணந்தார் , அவர்களுக்கு ஆகாஷ் மற்றும் ஆனந்த் என்ற இரண்டு மகன்களும், ஆகாஷின் இரட்டையரான இஷா என்ற மகளும் உள்ளனர்.தற்போது இவரது இளைய மகனின் திருமணம் நடந்ததை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். அந்த திருமண விழாவில் முகேஷ் அம்பானியின் மகனாகிய ஆனந்த் அம்பானி மற்றும் மருமகள் ராதிகா திருமண வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது. ஆனந்த் அம்பானி 10 ஏப்ரல்1995 அன்று பிறந்தார். அப்போது ராதிகா மெர்ச்சன்ட்டின் என்பவரை திருமணம் செய்து கொள்ளும் தகவல் வெளிவந்தது. 


இதைத்தொடர்ந்து ஆனந்த் அம்பானி திருமணமானது மிகவும் பிரம்மாண்டமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இவர்களில் கல்யாணத்திற்கு ஆன செலவு  கிட்டத்தட்ட 2000 கோடியை நெருங்குகிறது.மேலும் ஆனந்தமாடியின் திருமணத்திற்கு பல பிரபலமான நபர்களும் வந்திருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரின் குடும்பத்தார்கள், கிரிக்கெட் விளையாட்டாளர் M S தோனி, நடிகை அனன்யா பாண்டே, மேலும் சில முக்கிய நபர்களும் வந்திருந்தனர்.இதைத்தொடர்ந்து  இந்த திருமண விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆனந்த் அம்பானி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுவது என்னவென்றால், "சின்ன வயதில் இருந்தே எனக்கு உடல் நலத்தில் நிறைய பிரச்சனைகள் இருந்தன. மேலும் இவர் சின்ன வயது முதல் எதிர்கொண்ட பிரச்சனைகளும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு அவரின் அம்மா அப்பாவையும்  பற்றி மிகவும் நெகிழ்ச்சியாக உரையாற்றினார். அதை கேட்டுக் கொண்டிருந்த முகேஷ் அம்பானி கண்களில் கண்ணீர் மல்க அமர்ந்திருந்தார்.

மேலும் அவர் கூறுவது நான் 2008ம் ஆண்டு சிறிய வயதில் இருக்கும் பொழுது எனக்காக என் குடும்பங்கள் பல விஷயங்களை செய்துள்ளனர். என்னுடைய வாழ்க்கையில் எப்பொழுதும் முழுமையாக ரோஜா பூக்கள் மட்டுமே இருந்ததில்லை, முல்களின் வலியையும் நான் அனுபவித்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் சிறு வயதில் இருந்தே பல உடல் நல பிரச்சனைகளை சந்தித்ததாகவும், ஆனால் என் அம்மாவும் அப்பாவும் ஒருபோதும் என்னை கைவிட்டதில்லை என்றும் கண்கலங்கி கூறியுள்ளார் ஆனந்த அம்பானி. நான் கஷ்டப்பட்ட போதெல்லாம் என்னுடன் எப்போதும் இருந்து என்னை விட்டு பிரியாமல் இருந்த அம்மா, அப்பா, சகோதரர், சகோதரி மற்றும் குடும்பத்தினருக்கு இந்த தருணத்தை ஏற்படுத்தி தந்ததை பற்றி மிகவும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.முன்னதாக  அம்பானியின் மகனாக நான் இருந்திருந்தால் இவ்வளவு உழைக்க தேவையில்லை என்ற எண்ணம் பல இளைஞர்களின் மத்தியில் எழுவது வழக்கம்!  ஆனால் அம்பானியின் மகனுக்கே இப்படி ஒரு சம்பவம் நடந்த செய்தி வெளியாகி இருப்பது பலரின் கவனத்தை பெற்றதோடு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அம்பானியின் மகனாகவே இருந்தாலும் கஷ்டம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இருக்கத்தான் செய்யும் புரிந்து கொள்ள வேண்டும். இதிலிருந்து இன்பமும் துன்பமும் வாழ்வில் சரி பாதி என்பது தெரிய வருகிறது.  இதைத்தொடர்ந்து ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு முந்தைய நாள் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் நெகிழ்ச்சியாக பேசிய வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.