24 special

டெல்லி விஷயமே வேற? கோவில் பிரசாதங்களில் போடப்பட்ட பிளான்! திடுக்கிடும் தகவல்கள் வெளியானது

DR.SHAHINA, NIA
DR.SHAHINA, NIA

இந்தியாவின் பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த ஐஎஸ்ஐஎஸ் கோரசன் பிரிவு பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. மக்களை விஷம் கொடுத்து கொல்லும் நோக்கில் செயல்பட்ட இவர்கள் குஜராத்தில் நடைபெற்ற அதிரடி நடவடிக்கையில் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட “ரிசின்” எனப்படும் கொடிய உயிரணு நச்சுப் பொருள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சதி சாதாரண பயங்கரவாதத் தாக்குதல் அல்ல. துப்பாக்கி, குண்டு, வெடிகுண்டு போன்றவற்றைத் தாண்டி, உணவு மற்றும் குடிநீரில் விஷம் கலக்கி மக்களை அழிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் மூலம் கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம், தண்ணீர், சமூக உணவுகள் வழியாக ஆயிரக்கணக்கான மக்களை கொல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணை அதிகாரிகள் கூறுகையில், இது வெறும் உயிரிழப்பு சம்பவமாக அல்ல; இந்திய மக்களின் நம்பிக்கையையும் மத உணர்வையும் சிதைக்க முயன்ற திட்டம் என கூறப்படுகிறது.

மேலும் டெல்லி கார் குண்டு வெடிப்பு கிட்டதட்ட கோயம்புத்துரில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் வெடித்த கார்போன்ற சாயலில் தெரிகின்றது , விசாரணையின் கோணம் அப்டித்தான் செல்கின்றது கடந்த 2022 ஆம் ஆண்டு கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது கோயம்புத்தூரில் பெரும் தாக்குதல் செய்ய திட்டமிட்டபோது விஷயம் இந்திய உளவு அமைப்புக்களால் கண்டறியபட்டு ரகசிய நடவடிக்கை எடுக்கப்டும் போது இனி தாக்குதல் சாத்திய்மில்லை கைதும் உறுதி என அஞ்சிய முபின் என்பவன்  கோட்டை ஈஸ்வரன் கோவில் வாசலில் கார்வெடித்து பலியானான்  தீவிரவாதி. கோவையில் நடந்ததும் டெல்லியில் நடந்ததும் ஒரே வகை முயற்சி அதே அம்மோனியம் நைட்ரேட் எனும் உரத்தை வெடிகுண்டாக்கிய முயற்சி, தமிழகத்தில் அப்போது அதிகாலை என்பதால் யாரும் சாகவில்லை டெல்லியில் ரயில் நிலையம் அதுவும் மாலை பரபரப்பான நேரம் என்பதால் சாவு நடந்துவிட்டது.ஆக டெல்லி போலிஸ் உண்மையினை சொல்லியது. இந்தநிலையில் என்.ஐ.ஏ பார்வை தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. மேலும் மதரீதியாக பேசும் தலைவர்களை சுற்றி வளைக்க உள்ளது. அவர்களின் பின்னால் தான் தேச துரோகிகள் ஒளிந்து கொள்கிறார்களே என்ற சந்தேகம் வலுத்துள்ளது. 

விசாரணையில் வெளிப்பட்ட முக்கிய தகவலின் படி, இந்த மருத்துவர்கள் அனைவரும் மத அடிப்படையிலான தீவிரவாத விளக்கங்கள் மூலம் மாற்றப்பட்டவர்கள். அவர்களுக்கு “புனிதப் போர்” என்ற பெயரில் மக்களை விஷம் கொடுத்து கொல்லும் பணி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், டாக்டர் ஷாகின் சையித் என்ற பெண் ஜெய்சி முகமது அமைப்பின் பெண்கள் பிரிவு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் சமூக ஊடகங்கள் வழியாக இந்தியாவில் பெண்களை ஆட்சேர்ப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு வாரமாக நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாத வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. முப்படைகள், தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), மற்றும் மாநில ATS பிரிவுகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் மூலம் உயிரணு மற்றும் வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்தி நடத்தவிருந்த பல தாக்குதல்கள் தடுக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் இந்தியாவில் மதத்தின் பெயரில் நடக்கும் தீவிரமான சதிகள் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், இந்திய பாதுகாப்பு அமைப்புகள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படுகின்றன என்பதையும் நிரூபிக்கிறது. “ரிசின் விஷச் சதி” இந்திய மக்களுக்கு ஒரு எச்சரிக்கை. மதம், உணவு, நம்பிக்கை என்ற பெயரில் நம்மை பிரிக்க முயல்பவர்களை கண்டறிந்து விழிப்புடன் இருக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை.