24 special

சிவகார்த்திகேயன் மீது மீண்டும் ஒரு விமர்சனம்..?

Murugadoss, Sivakarthikarthikeyan
Murugadoss, Sivakarthikarthikeyan

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த வரிசையில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் விஜய், அஜித், சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் மிக குறுகிய காலத்தில் வளர்ந்தவர் ஆவார். ஆரம்பத்தில் இவரின் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் சிவகார்திகேயன் மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்தது. இது முடிவதற்குள் பிரபல இயக்குனர் சிவகார்த்திகேயனை கடிந்து கொண்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரின்ஸ் படம் சரியாக போகவில்லை என்றாலும் அதன்பின் வெளியான மாவீரன் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், பொங்கல் ரிலீஸாக வந்த அயலான் படமும் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. நல்ல வரவேற்பை பெற்றாலும் ஏன் இன்னும் வெற்றி விழா கொண்டப்படவில்லை என கேள்வி எழுந்தது. தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் காட்சிகள் காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடுங்கி சாய்பல்லவி நடித்து வருகிறார். இந்த படம் ஷூட்டிங் தொடங்கியதும் இசையமைப்பாளர் இமான் தனது வாழ்க்கையில் மறக்கமுடியாத நபர் என பேசியது முதல் விமர்சனமாக மாறியது. அதன் பிறகு நகைச்சவை நடிகர் பாண்டி ஒரு விமர்சனம் வைத்ததும் பரபரப்பாக மாறியது.

இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் தாமதமானதால் தயாரிப்பாளர் கமலஹாசன் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுப்பதில் கைவைத்ததாக சில தகவல் வெளியில் வந்தன. இப்படத்தில் நடித்துகொண்டிருக்கும்போதே இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். முருகதாஸும், சிவகார்த்திகேயனும் சந்தித்துகொண்ட புகைப்படங்களும் வெளியானது. கமலஹாசன் தயாரிப்பில் நடித்து வரும்போதே முருகதாஸுடன் நடிப்பதாக ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஆனால், இதுவரை அந்த படம் தொடங்கவில்லை என கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் சில பிரச்சனை ஏற்பட்டதால் படப்பிடிப்பு சிறிய நாட்கள் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியுயது. இதனால், முருகதாஸ் செம கடுப்பில் இருக்காராம். ஏனெனில், அவரின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை. எனக்கு உடனே கால்ஷீட் கொடுங்கள் என சிவகார்த்திகேயனை நச்சரிக்க துவங்கிவிட்டாராம். அதோடு, இனிமேலும் காத்திருக்க முடியாது என கறாராக சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. காஷ்மீரில் ராணுவ வீரராக நடித்து வரும் சிவகார்த்திகேயன் அந்த கெட்டப்பை முருகதாஸுடன் நடிக்கும் போது மாற்ற முடியாமல் இருப்பதால்  இருப்பதாக சிவகார்த்திகேயன் தரப்பு கூறுகிறது.

முருகதாஸ் படத்திற்காக மலையாளத்தில் தள்ளுமாலா படத்தின் கேமராமேன் ஜிம்ஸி காலித் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் அவரும் பல மாதங்களாக காத்திருக்கிறார். இனியும் சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுக்கவில்லை என்றால் வேறு நடிகரை தேட முருகதாஸ் உறுதியாக உள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர். முருகதாஸ் கடைசியாக தர்பார் படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.