24 special

அடேங்கப்பா.. என்னா அடி.. என்னா உதை ...! டெய்லர் கொலை குற்றவாளிகளை போட்டு பொளந்து கட்டிய மக்கள்.!

Udaipur people
Udaipur people

நூபூர் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததன் விளைவாக உதய்ப்பூரை சேர்ந்த டெய்லர் கண்ணையாவை கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் அடுத்த சில மணி நேரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


அதன் பின்னர் அவர்களுக்கும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையது பற்றி செய்திகள் வெளியானது . கொலை செய்த ரியாஸ் அக்தர் மற்றும் கவுஸ் முகமதுவை கைது செய்த போலீசார், இதில் தொடர்புடைய மேலும் ஆசிப் முக்சின் என்ற 2 குற்றவாளிகளையும் கைது செய்தது. இந்த நான்கு பேரையும் நேற்றைய ஜெய்பூர்  சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது வருகின்ற 12ம் தேதி வரை அவர்களை போலீஸ்க்காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, இவர்களை அழைத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு வெளியே காவலர்கள் வரும்போது அங்கு கூடி இருந்த வழக்கறிஞர்களும் பொதுமக்களும் மிகவும் ஆவேசத்துடன் நான்கு பேரையும் செம்ம அடி அடித்தனர். பொதுமக்களிடம் இருந்து இந்த நான்கு குற்றவாளிகளை ஒரு வழியாக காப்பாற்றி அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றினர் காவல் துறையினர். 

இந்த குற்றவாளிகளை அழைத்து வரும்போது அங்கிருந்த வழக்கறிஞர்கள் இந்த நான்கு பேரையும் தூக்கிலிட வேண்டும் என்று கோசம் எழுப்பினர். மேலும் இவர்கள் மற்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிலிருந்து பல சதி வேலைகளை செய்ததால் பாகிஸ்தான் ஒழிகை என கோஷம் எழுப்பினர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.