24 special

பஸ்ஸிற்குள் "பஞ்சரான" பாஜக எதிர்ப்பாளர் தமிழகத்தில் உண்டான அதிரடி மாற்றம்?

Bjp
Bjp

தமிழகத்தில் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக பாஜகவினர் இருந்த காலம் மாறி இப்போது எங்கு பார்த்தாலும் பாஜகவினர் இருக்கும் காலமாக மாறி இருக்கிறது, அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு வீடியோ அமைந்துள்ளது, அரசு பேருந்து ஒன்றில் ஏறிய இளைஞர் ஒருவர் கடுமையாக பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளை விமர்சனம் செய்தார்.


நாடு நாசமாக செல்வதாக அவரது கருத்துக்களை வீரியமாக பதிவு செய்தார் இதனை அங்கிருந்த பொது மக்கள் அமைதியாக கேட்டு கொண்டு இருந்த சூழலில் திடீர் என நாடு நலம் பெற ஒரே தீர்வு பாஜக ஆர். எஸ். எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை அடித்து விரட்டவேண்டும் எனவும் நாடாளுமன்றம் சட்டமன்ற தேர்தலில் வாக்கு அளிப்பதால் ஒன்றும் நடந்து விடாது என தெரிவித்தார்.

இது கடும் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில் இளைஞர் ஒருவர் நான் ஆர்எஸ் எஸ் காரன்தான் என்னை அடி பாப்போம்.. வா அடி என்று நெஞ்சை நிமிர்த்தி எழ வாயை மூடி நடையை கட்டினார் வீர வசனம் பேசிய பாஜக எதிர்பாளர், தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு இருக்காது என்ற பழைய நினைப்பில் பேச ஆனால் பஸ்ஸிற்குள் பாஜகவினர் இருந்து எதிர்கேள்வி எழுப்பிய நிலையில் வாயை மூடி ஓட்டம் எடுத்தார் இளைஞன்.

ஆர்எஸ் எஸ் நபரை அவரது குடும்பத்தினர் சமாதான படுத்தவில்லை என்றால் பேருந்திற்குள் பாஜக எதிர்பாளர் கதி என்ன ஆகி இருக்கும் என்று தெரியவில்லை அந்த அளவு பதிலடி கிடைத்து இருக்கும் என்று கூறப்படுகிறது, பாஜகவினர் நேரடியாக களத்தை சந்திக்க தயாராகி இருப்பது இது போன்ற நிகழ்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

காணொளி எப்போது எங்கு எடுத்தது என்ற தகவல் நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. வைரலாகும் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.